நாமக்கல் ராம்தேவ்ஜி கோயிலில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை

நாமக்கல் ராம்தேவ்ஜி கோயிலில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-02-04 10:15 GMT

சித்தரிப்பு காட்சி.

நாமக்கல், ராமாபுரம்தூர் குட்டைமேலத்தெருவில் ராம்தேவ் ஜி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக முகேஷ் என்பவர் இருந்து வருகின்றார். வழக்கம் போல் இரவு பூஜையை முடித்துவிட்டு,  கோயிலின் கதவுகளை பூட்டி விட்டு முகேஷ் வீட்டிற்கு சென்று விட்டார்.

அடுத்தநாள் அதிகாலையில் கோவிலை திறக்க வந்த போது, ஏற்கனவே கோயிலின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த உண்டியலை மர்மநபர்கள் உடைத்து அதிலிருந்த பணத்தை திருடிச் சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து, நாமக்கல் போலீஸ் நிலைலயத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் கோயிலுக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோயில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News