நாமக்கல் பேக்கரியில் திடீர் தீ விபத்து: பொருட்கள் எரிந்து சேதம்

நாமக்கல் பேக்கரியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

Update: 2022-03-14 05:00 GMT

பைல் படம்.

நாமக்கல் பரமத்தி ரோட்டில், கார்த்திக் பிரகாஷ் என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அந்த பேக்கரியின் சுவிட்ச் போர்ட்டில் மின்கசிவு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதனால் பேக்கரி பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், பயந்துபோய் கடையில் இருந்து வெளியே ஓடிவந்தனர். இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நிலைய அலுவலர் ராஜேஸ்வரன் தலைமையில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்தில் கடையில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

Tags:    

Similar News