சிங்கப்பூர் தமிழர்கள் சார்பில் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பாரா மீட்டர் கருவிகள்!

நாமக்கல் அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சைப்பிரிவுக்கு சிங்கப்பூர்வாழ் தமிழர்களின் சார்பில் ரூ. 4.50 லட்சம் மதிப்பிலான மல்டி பாராமீட்டர்களை எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.

Update: 2021-06-13 11:04 GMT

நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் சார்பில் மல்டி பாராமீட்டர் கருவிகளை எம்எல்ஏ ராமலிங்கம் வழங்கினார்.

சிங்கப்பூர் வாழ், நாமக்கல் தமிழர்கள் சார்பாக, நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு 6 மல்டிபாரா மீட்டர் கருவிகள் ரூ.4.5 லட்சம் மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் டிரான்ஸ்போர்ட் சிட்டி ரோட்டரி சங்கத்தினர் இந்த கருவிகளைப் பெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

அரசு ஆஸ்பத்திரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் கலந்துகொண்டு பாரா மீட்டர் கருவிகளை, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழியிடம் ஒப்படைத்தார்.

இதில், மருத்துவர் கண்ணப்பன், கண் மருத்துவர் ரங்கநாதன், ரோட்டரி சங்க பிரமுகர்கள் ராமநாதன், எட்டிக்கன், மணி, செந்தில், தாளம்பாடி பஞ்சாயத்து தலைவர் சதீஷ்குமார் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News