சிறுமிக்கு பாலியல் தொல்லை: விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டருக்கு எஸ்.பி., பாராட்டு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிறப்பாக விசாரணை நடத்திய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, மாவட்ட எஸ்.பி பாராட்டு தெரிவித்தார்.

Update: 2022-04-05 10:15 GMT

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், சிறப்பாக விசாரணை நடத்திய, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரிக்கு, நாமக்கல் மாவட்ட எஸ்.பி சாய்சரன் தேஜஸ்வி பாராட்டு தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர், ராம்ஜி நகரைச் சேர்ந்த ராமதாஸ்(55) மற்றும் செல்வராஜ்(60) ஆகியோர், அதே பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

மேலும், ராமதாஸ் அதே பகுதியைச் சேர்ந்த வேறு இண்டு சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது சம்மந்தமாக புகாரின்பேரில், நாமக்கல் அனைத்து மகளிர் போலீசில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ராமதாஸ், செல்வராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்குகள் நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. கடந்த 4ம் தேதி வழக்கு விசாரணை முடிவுற்று தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றவாளி ராமதாசுக்கு இரண்டு வழக்கில் தலா 20 ஆண்டு சிறை தண்டனையும், செல்வராஜூக்கு ஒரு வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இவ்வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த, அப்போதைய நாமக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, ஏட்டு ராணி ஆகியோருக்கு மாவட்ட போலீஸ் எஸ்.பி., சாய்சரன் தேஜஸ்வி பாராட்டு தெரிவித்தார்.

Tags:    

Similar News