ராசிபுரம் அருகே செப். 2ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு திருவிழா

ராசிபுரம் அருகே செப்.2 ம் தேதி மாவட்ட அளவிலான தனியார் துறை வேலை வாய்ப்பு திருவிழா நடைபெறுகிறது.

Update: 2023-08-21 10:00 GMT

பைல் படம்

நாமக்கல் மாவட்ட அளவில் தனியார் துறை வேலை வாய்ப்பு திருவிழா வருகிற செப்.2 ம் தேதி ராசிபுரம் அருகே நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் மூலம், படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து நடத்தும், மாவட்ட அளவிலான, தனியர் துறை இளைஞர் திறன் மற்றும் வேலை வாய்ப்பு திருவிழா

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே, ஏ.கே.சமுத்திரத்தில் உள்ள ஞானமணி கல்லூரி வளாகத்தில் வருகிற செப்.2ம் தேதி காலை 9. மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த இளைஞர் திறன் மற்றும் வேலைவாய்ப்பு திருவிழாவில், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இருபாலரும் கலந்து கொண்டு, பொருத்தமான நிறுவனங்களை தேர்வு செய்து தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், வேலை வாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய விரும்புகிற தனியார் நிறுவனங்கள், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்தை, 04286 - 28113 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு செப். 1க்குள் பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வேலையில்லா இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News