79 வாகனங்கள் நாமக்கல்லில் ரூ. 12.97 லட்சம் மதிப்பில் போலீசாரால் ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 79 வாகனங்கள், ரூ.12 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பில் ஏலம் விடப்பட்டன.

Update: 2022-02-22 00:00 GMT

போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் ஏலம் விடப்பட்டது.

நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில்,  பல்வேறு குற்ற வழக்கில் கைப்பற்ற வாகனங்கள் உள்பட, மொத்தம் 79 வாகனங்கள் ஏலம் நடைபெற்றது. போலீஸ் ஏடிஎஸ்பிக்கள் சேகர், மணிமாறன் ஆகியோர் தலைமை வகித்தனர். எஸ்ஐ காளியப்பன் முன்னிலை வகித்தார்.

பொது ஏலத்தில் கலந்துகொண்டவர்கள், 71 டூ வீலர்கள், 8 நான்கு சக்கர வாகனங்களை ரூ. 12 லட்சத்து 97 ஆயிரத்து 126 மதிப்பில் ஏலம் எடுத்தனர். வாகனங்கள் ஏலம் எடுத்தவர்களிடம் உடனடியாக ஒப்படைக்கப்பட்டது. எஸ்ஐ தேவிகாராணி, சேலம் அரசுப் பணிமனை உதவி பொறியாளர் தேவப்பிரியா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News