இணைய மோசடியில் இழந்த ரூ.2.17 லட்சம் மற்றும் செல் போன்கள் ஒப்படைப்பு

இணைய மோசடியில் இழந்த ரூ.2.17 லட்சம் மற்றும் செல் போன்களை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Update: 2022-05-11 13:10 GMT

இணைய மோசடியில் பணத்தை இழந்தவர்களிடம் உரிய தொகையை திருவண்ணாமலை எஸ்.பி. வழங்கினார்.

நாமக்கல் மாவட்டத்தில், இண்டர்நெட் குற்றங்கள் மூலம், பணம் இழப்பு ஏற்பட்டதாகவும், மொபைல் போன்கள் திருடப்பட்டது, தவறவிட்டது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் நாமக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு வந்தன. இதையொட்டி எஸ்.பி சாய் சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில், சைபர் கிரைம் பிரிவு ஏ.டி.எஸ்.பி. செல்லபாண்டியன் தலைமையில், இன்ஸ்பெக்டர் வேதபிறவி மற்றும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதையடுத்து, இண்டர்நெட் குற்றங்கள் மூலம், இழந்த பணம், மற்றும் மாயமான மொபைல் போன்கள் மீட்கப்பட்டது. நாமக்கல் எஸ்.பி ஆபீசில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எஸ்.பி சாய் சரண் தேஜஸ்வி உரியவர்களிடம் பணம் மற்றும் மொபைல் போன்களை ஒப்படைத்தார். அதில், நாமக்கல் லோகேஸ்வரனுக்கு, ரூ.1 லட்சம், பள்ளிபாளையம் நவீன்குமாருக்கு ரூ. 76,629 ரூபாய், நாமக்கல் ஜாபருக்கு ரூ. 13,350 ரூபாய், ராசிபுரம் கவுதம் என்பவருக்கு ரூ.24, 500 ரூபாய், திம்மநாயக்கன்பட்டி பிரபு, ராசிபுரம் கிஷோர் உள்ளிட்டோருக்கு மொத்தம் ரூ.2.17 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது. மேலும், திருடப்பட்ட மற்றும் தவற விடப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள 77 மொபைல் போன்களும் மீட்கப்பட்டு உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

Tags:    

Similar News