ஆர்.புளியம்பட்டி பொன் வரதராஜ பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா

நாமக்கல் அருகே ஆர். புளியம்பட்டியில் அமைந்துள்ள பொன் வரதராஜ பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

Update: 2022-05-13 12:00 GMT

நாமக்கல் அருகே, ஆர்.புளியம்பட்டி பொன் வரதராஜபெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

நாமக்கல் அருகில் உள்ள கல்யணி பஞ்சாயத்து, ஆர். புளியம்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு பொன் வரதராஜ பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.

கும்பாபிசேக விழாவை முன்னிட்டு பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி தீர்த்தக்குடங்களை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கோயிலில் விநாயகர் பூஜை, புண்யாக வாகனம், கலச ஆவாஹனம் மற்றும் முதல் முதல் கால யாக பூஜை நடைபெற்றது. பின்னர் காயத்திரி ஹோமம், நவக்கிரக ஹோமம் போன்ற சிறப்பு பூஜைகள் நடைபெநற்றன. இன்று காலை வேத பாராயணத்துடன் மகாகணபதி, நவகிரக, குபேர மகாலட்சுமி, சுதர்சன மூலமந்திர ஹோமங்கள் நிறைவுபெற்று, மகா பூர்ணாஹூதி நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் இருந்து, புனிதா நீர் அடங்கிய கலசங்கள் எடுத்துச்செல்லப்பட்டு மகா கணபதி மற்றும் பொன் வரதராஜப் பெருமாளுக்கு கும்பாபிசேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு மகா தீபாராதணை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News