நாமக்கல்லில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை! 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் பங்கேற்பு

நாமக்கல்லில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் பங்கேற்றனர்.

Update: 2024-04-11 04:15 GMT

பட விளக்கம் : நாமக்கல் ஈத்கா மைதானத்தில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற, சிறப்புத் தொழுகையில் ஏராளமான முஸ்லீம்கள் கலந்துகொண்டனர்.

நாமக்கல் ஈத்கா மைதானத்தில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற, சிறப்புத் தொழுகையில் ஏராளமான முஸ்லீம்கள் கலந்துகொண்டனர்.

நாமக்கல்லில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் பங்கேற்பு

நாமக்கல், 

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல்லில் இன்று காலை நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கலந்துகொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் ரம்ஜான் மாதம் நிறைவில் முஸ்லீம்கள் ரம்ஜான் பண்டிகைய, புத்தாடை அணிந்து சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு, நாமக்கல் அஞ்சுமனே இஸ்லாமிய ஜாமியா மஸ்ஜித் சார்பில், ரம்ஜானை முன்னிட்டு நாமக்கல் பேட்டை பள்ளிவாசலில் இருந்து, முத்தவல்லி தவுலத்கான் தலைமையில் திரளான முஸ்லீம்கள் ஊர்வலமாக புறப்பட்டு, சேலம் ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தை சென்றடைந்தனர். அங்கு ரம்ஜான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ஜாமியா பள்ளி வாசல் இமாம் சாதிக்பாஷா சிறப்பு தொழுகையை நடத்தினார். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர் தொழுகையில் கலந்துகொண்டனர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

பள்ளிவாசல் துணைத்தலைவர் பாரூக் பாஷா, செயலாளர் நியாமத், துணை செயலாளர் சையத் நாசர், பொருளாளர் மகபூப் பாஷா, செயற்குழு உறுப்பினர்கள் முகமது அலி, மஹபூப் பாஷா, ஆலிம்ஷா, ஷேக் நிஜாம், அப்துல் ரஹ்மான், சிக்கந்தர் ஆகியோர் சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News