பரமத்திவேலூரில் வரும் 23ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

பரமத்திவேலூரில் வரும் 23ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

Update: 2022-08-18 11:00 GMT

பைல் படம்.

பரமத்தி பி.டி.ஓ ஆபீசில் வரும் 23ம் ÷ ததி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்த, நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ், படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம், வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், வட்டார அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 23ம் தேதி, காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெறுகிறது.

வேலைவாய்ப்பு முகாமில், பரமத்தி மற்றும் கபிலர்மலை வட்டாரங்களை சேர்ந்த படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இருபாலரும் கலந்து கொண்டு, பொருத்தமான நிறுவனங்களை தேர்வு செய்து வேலை வாய்ப்பு பெற்றுக்கொள்ளலாம். மேலும், வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய விரும்பும் நிறுவனங்கள், வரும் 22ம் தேதி மாலை 5 மணிக்குள், மாநில ஊரக வாழ்வாதார இயக்க, மாவட்ட திட்ட இயக்குனரை அனுகி பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News