நாமக்கல் நகர பாஜக சார்பில், ஒண்டி வீரன் நினைவு தினம் அனுசரிப்பு

நாமக்கல் நகர பாஜக சார்பில், சுதந்திப் போராட்ட வீரர் ஒன்டிவீரனின் 251வது நினைவு தின நிகழ்ச்சி, மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது.

Update: 2022-08-20 10:00 GMT

நாமக்கல் நகர பாஜக சார்பில், சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன்நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

நகர பாஜக தலைவர் சரவணன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, ஒண்டி வீரனின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். நகர செயலாளர் வேலுசாமி, பட்டியல் அணி தலைவர் குமார், மாவட்ட பொதுச்செயலாளர் சத்தியபானு, நகர பொதுச்செயலாளர் தினேஷ், யுவராஜ், நகர துணைத் தலைவர்கள் சாந்தி, சிவகுமார், நகர செயலாளர்கள் வேல்ராஜ் , பெரியசாமி, பால கண்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினார்கள்.

Tags:    

Similar News