நாமக்கல் மாவட்டத்தில் இன்று இரவு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

நாமக்கல் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று இரவு கொண்ட்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி., தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-31 03:00 GMT

சரோஜ்குமார் தாக்கூர், நாமக்கல் எஸ்.பி.,

நாமக்கல் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இன்று இரவு கொண்ட்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி., தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி சரோஜ்குமார் தாக்கூர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், நாமக்கல் மாவட்டத்தில் இன்று 31ம் தேதி இரவு ஹோட்டல்கள், லாட்ஜ்கள், ரோடுகள் மற்றும் பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை.

புத்தாண்டை ஒட்டி வாகனங்களில் அதிவேகமாகவும், தாறுமாறாகவும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவ்வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். இன்று இரவு முதல் மாவட்டத்தில் 93 முக்கிய இடங்கள் கண்டறியப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுள்ளது. 33 டூ வீலர்களில் போலீஸ் ரோந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, 11 வாகன சோதனைச் சாவடிகள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை செல்லும் வழிகளில் காரவள்ளி மற்றும் முள்ளுக்குறிச்சி ஆகிய இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை மேற்கொள்ளப்படும். 2022 புத்தாண்டை பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் அசம்பாவிதமின்றியும் கொண்டாடும் வகையில், மாவட்டத்தில் 900 போலீஸார் மற்றும் 200 ஊர்காவல் படையினரைக் கொண்டு மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்பப்பட்டுள்ளது. எனவே போலீசாருடன் ஒத்துழைத்து, பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் புத்தாண்டை கொண்டாடி மகிழ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

Similar News