கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல்லில் கோபூஜை: பக்தர்கள் வழிபாடு

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ பாலதண்டாயுதபாணி கோவிலில் கோமாதா பூஜை நடைபெற்றது.

Update: 2021-08-31 02:00 GMT

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல் ஸ்ரீ பாலதண்டாயுபாணி கோயிலில் கோமாதா பூஜை நடைபெற்றது.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாமக்கல்லில் கோமாதா பூஜை நடைபெற்றது. நாமக்கல் மோகனூர் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ பால தண்டாயுதபாணி கோவிலில் நடைபெற்ற கோமாதா பூஜை நிகழ்ச்சிக்கு பாஜக நகர பொதுச் செயலாளர் செந்தில் தலைமை வகித்தார். நாமக்கல் ஜேசிஸ் சங்க தலைவர் பிரணவகுமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முருகனுக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து பசுக்களுக்கு கோமாதா பூஜை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக அகில பாரத கிசான் சங்க பொறுப்பாளர் கணேசன், கொல்லிமலை கருணா சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.பாஜக பிரமுகர்கள் ராவணன், வக்கீல்கள் மனோகரன், குப்புசாமி, இளங்கோவன், ஆன்மீக இந்து சமய பேரவை ஏகாம்பரம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News