நாமக்கல் தெற்கு பிரிவு மின்வாரிய அலுவலகம் மார்ச்.1 முதல் இடமாற்றம்

நாமக்கல் கோட்டத்திற்கு உட்பட்ட, நாமக்கல் தெற்கு, எருமப்பட்டி உட்கோட்ட பிரிவு அலுவலகம் இடமாற்றம் செய்யப்படுகிறது.

Update: 2022-02-25 11:30 GMT

நாமக்கல் தெற்குப் பிரிவு மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் செய்யப்படுகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின், நாமக்கல் கோட்டத்திற்கு உட்பட்ட, நாமக்கல் தெற்கு, எருமப்பட்டி உட்கோட்ட பிரிவு அலுவலகம், அண்ணா நகர் பஸ் ஸ்டாப் அருகில் இயங்கி வந்தது. தற்போது நிர்வாக காரணங்களுக்காக அந்த அலுவலகம், அண்ணா நகர், வேட்டாம்பாடி ரோட்டில் க.எண். 4/197 என்ற முகவரியில் இடமாற்றம் செய்யப்பட்டு, வருகிற மார்ச் 1ம் தேதி முதல் புதிய முகவரியில் செயல்பட உள்ளது.

எனவே நாமக்கல் தெற்கு பிரிவு பகுதியில் உள்ள கூலிப்பட்டி, ரெட்டிப்பட்டி, பெருமாப்பட்டி, வேப்பனம், தூசூர், கொடிகால்புதூர், போடிநாய்க்கன்பட்டி, ஜெகக்கோம்பை, கருட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மின்சார விநியோகம் சம்மந்தமான பணிகளுக்கு புதிய முகவரியில் உள்ள அலுவலகத்தை அனுகலாம் என்று, நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News