நாமக்கல்லில் நகராட்சி 34வது வார்டு வேட்பாளர் இசைத்து வாக்கு சேகரிப்பு

நாமக்கல் முனிசிபாலிட்டி, 34வது வார்டு கவுன்சிலராக, சுயேச்சை வேட்பாளர் ஸ்டாலின் கிதார் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

Update: 2022-02-15 10:45 GMT

நாமக்கல் நகராட்சி 34வது வார்டு சுயேச்சை வேட்பாளர் ஸ்டாலின் கிடார் கருவியை இசைத்து வாக்கு சேகரித்து வருகிறார்.

நாமக்கல் நகராட்சி 34 வது வார்டு வேட்பாளராக ஸ்டாலின் என்பவர் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவருக்கு கிதார் இசைக்கருவி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 34வது வார்டுக்கு உட்பட்ட அன்பு நகர், முல்லை நகர், அழகு நகர் உள்ளிட்ட பகுதிகளில், இவர் கிதார் இசைக்கருவியை வாசித்து கிதார் சின்னத்திற்கு ஆதரவு திரட்டி வருகிறார். திரளான இளைஞர்களும், பொதுமக்களும் அவரது இசையைக் கேட்டு ரசிக்கின்றனர். காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் பாண்டியன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News