தீ விபத்தில் வீடு இழந்த திமுக பிரமுகருக்கு நாமக்கல் எம்எல்ஏ நிதிஉதவி

தீ விபத்தில் வீடு இழந்த திமுக பிரமுகருக்கு, எம்எல்ஏ ராமலிங்கம் நிதி உதவி அளித்தார்.

Update: 2022-08-19 04:30 GMT

தீ விபத்தால் வீடிழந்த, திமுக பிரமுகர் சுந்தரத்திற்கு, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் ஆறுதல் கூறி, நிதி உதவி வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஒன்றியம், ஒருவந்தூர் திமுக கிளை செயலாளர் சுந்தரம். இவருக்கு சொந்தமான வீடு தீப்பற்றி எரிந்து சேதமடைந்துவிட்டதும். மேலும், ஒருவந்தூரை சேர்ந்த திமுக மூத்த உறுப்பினர் பிச்சை என்பவரின் தோட்டத்தில் 400க்கும் மேற்பட்ட வாழைமரங்கள் காற்றில் சாய்ந்ததால் அவருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி, நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் ஒருவந்தூரில் உள்ள, சுந்தரம் மற்றும் பிச்சை ஆகியோரின் வீடுகளுக்கு சென்று, அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களுக்கு நிதி உதவி வழங்கினார். விவசாய தொழிலாளர் அணி இணைச் செயலாளர் கைலாசம், மாவட்ட வர்த்தக அணி பொறுப்பாளர் ராமலிங்கம், வக்கீல் முத்துசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News