நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணி வேட்பு மனு தாக்கல்

நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக, அக்கட்சியின் மாவட்ட வர்த்தக பிரிவு அமைப்பாளர் தமிழ்மணி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Update: 2024-03-25 11:15 GMT

நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக தமிழ்மணி, தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியர் உமாவிடம் தாக்கல் செய்தார். அருகில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர்.

நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக, அக்கட்சியின் மாவட்ட வர்த்தக பிரிவு அமைப்பாளர் தமிழ்மணி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நாமக்கல் லோக்சபா தொகுதி அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் மாவட்ட வர்த்தகப்பிரிவு அமைப்பாளர், பரமத்தி ராகா ஆயில் மில் உரிமையாளர் தமிழ்மணி அறிவிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி நேற்று வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.

நாமக்கல் சேலம் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ள அதிமுக தேர்தல் அலுலகத்தில் இருந்து, மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணி தலைமையில், முன்னாள் அமைச்சர் டாக்டர் சரோஜா, எம்எல்ஏக்கள் பரமத்திவேலூர் சேகர், சங்ககிரி சுந்தரராஜ், நாமக்கல் நகர செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட திரளான அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் ஊர்வலமாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆபீசிற்கு வந்தனர். பின்னர் வேட்பாளர் தமிழ்மணி, மாவட்ட ஆட்சியர் உமாவிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதிமுக மாற்று வேட்பாளராக, தமிழ்மணியின் மகள் டாக்டர் யாழிணி (37) வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நாமக்கல் மாவட்ட பரமத்திவேலூரைச் சேர்ந்த அதிமுக வேட்பாளர் டாக்டர் தமிழ்மணி (64) எம்.எஸ்சி (அக்ரி) முதுகலை பட்டம் படித்துள்ளார். 1984ம் ஆண்டு முதல் சுமார் 10 ஆண்டுகள் அரசு வேலையில் பணியாற்றி, பின்னர் விருப்ப ஓய்வு பெற்றார். 1993ம் ஆண்டு முதல் பரமத்தி அருகே ராகா ஆயில் மில் என்ற சமையல் எண்ணெய் தயாரிப்பு ஆலையை நடத்தி வருகிறார்.

மேலும் விவசாயத்தில் ஈடுபட்டு பாரம்பரிய பயிர் வகைகளை பயிரிட்டு வருகிறார். இவர் தமிழ்நாடு வேளாண் பல்கலை மேலாண்மைக்குழு மற்றும் நிதிக்குழு உறுப்பினராக கடந்த 2005ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டு வரை பணியாற்றி உள்ளார்.

Tags:    

Similar News