நாமக்கல் எலக்ட்ரிகல் வியாபாரிகள் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் : கலெக்டரிடம் வழங்கல்

நாமக்கல் எலக்ட்ரிகல் வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ.1.60 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

Update: 2021-05-29 11:15 GMT

நாமக்கல் எலக்ட்ரிகல் வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள கொரோனா நிவாரணப் பொருட்களை கலெக்டர் மெகராஜிடம், சங்க தலைவர் சங்கர், வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஜெயகுமார் ஆகியோர் வழங்கினார்கள்.

நாமக்கல் எலக்ட்ரிக்கல் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ரூ.1.60 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரணப் பொருட்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது.

நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இணைப்பு சங்கமான நாமக்கல் எலெக்ட்ரிக்கல் வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ.1.60 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டன. வணிகர் சங்க பேரமைப்பு மாவட்ட தலைவர் ஜெயகுமார் முன்னிலையில் எலக்ட்ரிக்கல் வியபாரிகள் சங்க தலைவர் சங்கர் பல்ஸ் ஆக்சி மீட்டர்கள், மாஸ்க்குகள், கிளவுஸ் உள்ளிட்ட பொருட்களை கலெக்டர் மெகராஜிடம் வழங்கினார். ஆர்டிஓ கோட்டைக்குமார், மாவட்ட பேரமைப்பு செயலாளர் வீரக்குமார், சுரேஷ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலலந்துகொண்டனர்.

Tags:    

Similar News