ஜமாபந்தி சம்மந்தமான கோரிக்கை மனுக்களை ஆன்லைன் மூலம் அனுப்பி வைக்கலாம் - நாமக்கல் கலெக்டர் அறிவிப்பு..!

இந்த ஆண்டு ஜமாபந்தியின் போது பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்கள்பெறப்படாது. எனவே ஆன்லைன் மூலம் கோரிக்கை மனுக்களை அனுப்பலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-06-16 14:00 GMT

நாமக்கல் கலெக்டர் மெகராஜ் 

இந்த ஆண்டு ஜமாபந்தியின் போது பொதுமக்களிடம் இருந்து நேரடியாக மனுக்கள்பெறப்படாது. எனவே ஆன்லைன் மூலம் கோரிக்கை மனுக்களை அனுப்பலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அறிவிப்பின்படி, நாமக்கல் மாவட்டத்தில் பசலி ஆண்டு 1430 (2020-2021)-க்கான வருவாய்த்தீர்வாயத்தின் (ஜமாபந்தி) போது பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்கள் பெறப்படமாட்டாது. பொதுமக்கள் ஜமாபந்தி தொடர்பான கோரிக்கை மனுக்களை ஜிடிபி.டிஎன்.ஜிஓவி.இன்/ஜாமபந்தி/ என்ற வெப்சைட்டில் ஆன்லைன் மூலம் அனுப்பலாம். அல்லது இ-சேவை மையங்கள் மூலமாக 22.06.2021 முதல் 31.07.2021 வரை மனுக்களை அப்லோடு செய்யலாம். இவ்வாறு பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் மனுதாரர்களுக்கு தனியே அனுப்பி வைக்கப்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News