நாமக்கல் மாவட்ட கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ரூ.25 லட்சம் கொரோனோ நிவாரண நிதி
நாமக்கல் மாவட்ட கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் அளிக்கப்பட்டது.
நாமக்கல் மாவட்ட கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சத்திற்கான காசோலை, சென்னையில் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவிடம் வழங்கப்பட்டது.
சங்கத்தின் செயலாளர் கவுரிசங்கர், புளூ மெட்டல் மணி, ஜெயமணி புளூ மெட்டல் துரைசாமி ஆகியோர் காசோலையை வழங்கினார்கள்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார், நாமக்கல் எம்எல்ஏராமலிங்கம், இலக்கிய அணி அமைப்பாளர் ரங்கசாமி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.