நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை சாகுபடி திட்டங்கள் குறித்து கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டத்தில், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் பல்வேறு சாகுபடி திட்டங்களை, கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2021-07-09 04:15 GMT

புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வேளாண்மை, தோட்டக்கலைத்துறை திட்ட செயல்பாடுகளை,  கலெக்டர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மை, தோட்டக்கலைத் துறைகளின் மூலம் நுண்ணீர்ப் பாசனம், தெளிப்பு நீர் பாசனம், பயிர் மேலாண்மை, பந்தல் சாகுபடி, பயிர் சாகுபடிக்கான விதை உற்பத்தி, பயிர் சாகுபடியுடன் இணைந்து ஆடு, மாடு, கோழி வளர்த்தல், மண்புழு உரம் தயாரித்தல், தேனி வளர்த்தல் ஆகியவற்றை ஒருங்கிணைந்து மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த பண்ணையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் வகையில் பல திட்டப்பணிகள் மேற்கொள்ளப்ட்டு வருகின்றன. புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட செல்லப்பம்பட்டி, எ.உடுப்பம், சேவாகவுண்டம்பாளையம், ஆர்.புளியம்பட்டி கிராமங்களில் வேளாண், தோட்டக்கலைத் துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை,  கலெக்டர் ஸ்ரேயாசிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், விவசாயிகளிடம் சாகுபடி முறைகள், விற்பனை மற்றும் லாபம் ஈட்டுதல் குறித்து கலந்தாய்வு செய்தார்.

ஆய்வின் போது வேளாண்மைத்துறை இணை இயக்குநர் அசோகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகன், வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) ஜெகதீசன், புதுச்சத்திரம் வேளாண்மை உதவி இயக்குநர் பேபிகலா, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர்கள் சேரலாதன், பால்ஜாஸ்மின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News