நலிவடைந்த இசைக் கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள்: அமைச்சர் வழங்கல்

நாமக்கல்லில் நலிவடைந்த இசைக்கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்புகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

Update: 2021-06-13 07:45 GMT

நாமக்கல்லில் நலிவடைந்த இசைக்கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்களை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் வழங்கினார். அருகில் மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார்.

நாமக்கல்லில் நலிவடைந்த இசைக்கலைஞர்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்புகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

நாமக்கல் மாவட்ட திமுக கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் பிரபு ஏற்பாட்டின் பேரில், மறைந்த கிளாரினெட் இசைக்கலைஞர் வேணுகோபாலின் 79வது பிறந்த நாளை முன்னிட்டு நலிவடைந்த இசைக்கலைஞர்களுக்கு கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 35 நலிவடைந்த இசைக்கலைஞர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் மளிகைப்பொருட்கள் மற்றும் முட்டை உள்ளிட்ட தொகுப்புகளை வழங்கினார். முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் இளங்கோ, மாநில நிர்வாகிகள் நக்கீரன், மணிமாறன், டாக்டர் மாயவன், புதுச்சத்திரம் ஒன்றிய செயலாளர்கள் கவுதம், துரைராமசாமி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News