நாமக்கல்லில் உலக சிக்கன நாள் விழா: கலெக்டர் பரிசு வழங்கல்

நாமக்கல் மாவட்டத்தில் உலக சிக்கன நாள் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கலெக்டர், பரிசுகள் வழங்கினார்.

Update: 2022-02-24 11:00 GMT

நாமக்கல் மாவட்டத்தில் உலக சிக்கன நாள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் பரிசுகளை வழங்கினார்.

சிக்கனத்தை கடைப்பிடித்து சேமிப்பு பழக்கத்தை மக்களிடையே பெருக்க வேண்டுமென்ற நோக்கத்தில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30 ம் நாள் உலக சிக்கன நாளாக தமிழகத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில் மாணவர்களிடையே சிக்கனமும் சேமிப்பும் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடிவினா போட்டி மற்றும் கொள்கை குறிக்கோள் (முழக்கம்) ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.

அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் மாவட்ட அளவில் சிறந்த சிறுசேமிப்பு ஏஜெண்டுகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி, கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். 

Tags:    

Similar News