நாமக்கல்: மானியத்தில் மின் மோட்டார் பம்ப்செட் பெற விண்ணப்பிக்க அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மானியத்துடன் கூடிய மின்சார மோட்டார் பம்ப்செட் வழங்கப்படுகிறது.

Update: 2022-06-22 12:15 GMT

பைல் படம்

வேளாண்மை பொறியியல் துறை மூலம் மானியத்துடன் கூடிய மின்சா மோட்டார் பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- நாமக்கல் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மானியத்துடன் கூடிய மின்சார மோட்டார் பம்ப்செட் வழங்கப்படுகிறது. மானியத்துடன் கூடிய மின்சார மோட்டார் பம்ப் செட்டுகள் பெறுவதற்கு 3 ஏக்கர் வரை நிலம் சொந்தமாக வைத்திருக்கவேண்டும். சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின்மோட்டார் பம்ப்செட் மாற்றுவதற்கும் அல்லது புதிய மின் மோட்டார் பம்ப்செட் வாங்குவதற்கும் (அதிகபட்சம் 10 எச்.பி வரை) மாநில நிதி ஒதுக்கீட்டின் கீழ் இத்திட்டம் 2021-22 ம் ஆண்டு முதல் விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா அடங்கல், சிறு மற்றும் குறு விவசாயிக்கான தாசில்தார் சான்று, மின் இணைப்பு சான்றின் நகல், வங்கிப் புத்தகத்தின் முதல் பக்க ஜெராக்ஸ் நகல் ஆகிய ஆவணங்களுடன், விண்ணப்பத்தினை தங்கள் வட்டாரத்திற்குட்பட்ட உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். மேலும் இத்திட்டம் தொடர்பான முழு விவரங்களைப் பெற்றிட வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்களை அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News