மோகனூரில் பால் வண்டி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை: போலீசார் விசாரணை

மோகனூரில் பால் வண்டி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-03-31 10:15 GMT

பைல் படம்.

மோகனூர் முத்துராஜா தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (35), பால் லாரி டிரைவர். இவருடைய மனைவி சூரியகலா (32). இவர்களுக்கு மோனிகா (15), ரூபிணி (14), பிரியா (13) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். அவர்கள் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.

சக்திவேலுக்கு டிரைவர் வேலையில் போதிய வருமானம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் 3 மகள்கள் என்பதால் அவர்களுடைய வருங்கால கல்வி, திருமணம் ஆகியவற்றை எண்ணி அவர் மனவருத்தத்தில் இருதுள்ளார். சம்பவத்தன்று, சூரியகலா மாடுகளுக்கு தீவனம் எடுப்பதற்காக ஆற்றங்கரைக்கு சென்றார்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த சக்திவேல் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News