நாமக்கல் அரசு கல்லூரியில் வரும் 11ம் தேதி மெகா வேலை வாய்ப்பு முகாம்

நாமக்கல் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் வரும் 11ம் தேதி மெகா வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-11-30 13:00 GMT

பைல் படம்.

நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் வருகிற 11ம் தேதி மெகா தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் இணைந்து நடத்தும், மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வருகிற 11ம் தேதி, நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற உள்ளது. 

இம்முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், ஐடிஐ, டிப்ளமோ, பட்டதாரிகள் மற்றும் இன்ஜினியரிங் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு தனியார் துறையில் வேலை வாய்ப்பினை பெறலாம். இம்முகாமில் பங்கேற்கும் அனைவரும், https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவு செய்துகொள்ள வேண்டும். முகாம் முற்றிலும் இலவசமானது.

இம்முகாமில் 150-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய பயோ டேட்டா, உரிய கல்விச்சான்றுகள், மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன், கொரோனா தொற்று நடைமுறை அனுசரித்து முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். வேலையளிப்போரும், வேலை வேண்டுவோரும் முகாம் தொடர்பான விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News