மெகா கொரோனா தடுப்பூசி முகாம்: மாநில அளவில் நாமக்கல் மாவட்டத்திற்கு 10-வது இடம்

மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் மாநில அளவில், நாமக்கல் மாவட்டம் 10ம் இடத்தை பெற்றுள்ளது.

Update: 2021-09-14 11:15 GMT

மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் மாநில அளவில், நாமக்கல் மாவட்டம் 10ம் இடத்தை பெற்றுள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் 620 நிலையான மையங்கள் மற்றும் 80 நடமாடும் வாகனங்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. காலை 7 மணிக்கு துவங்கிய முகாம் இரவு 7 மணி வரை நடைபெற்றது.

இதில் மாவட்டம் முழுவதும்85 ஆயிரத்து 375 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். தடுப்பூசி முகாமில் முதல் தவணை தடுப்பூசியை 65 ஆயிரத்து 652 பேரும், 2-ம் தவணை தடுப்பூசியை 19 ஆயிரத்து 723 பேரும் செலுத்தி கொண்டனர். மொத்தம் 85 ஆயிரத்து 375 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

தடுப்பூசி அதிகம் போட்டு கொண்ட வர்களில் மாநில அளவில் நாமக்கல் மாவட்டம் 10வது இடம் பெற்றுள்ளது என பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News