பேராசிரியர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் கொங்குநாடு கல்லூரி வெற்றி

பேராசிரியர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் கொங்குநாடு கல்லூரி அணி வெற்றி பெற்றது.

Update: 2022-04-25 10:45 GMT

வெற்றிக்கோப்பையுடன் கொங்குநாடு பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் அணியினர் உள்ளனர்.

ஈரோடு நந்தா கல்வி நிறுவன வளாகத்தில், இன்ஜினியரிங் கல்லூரிகளின் பேராசிரியர்களுக்கான, மாநில அளவிலான 20-20 கிரிக்கெட் விளயைாட்டுப்போட்டி 3 நாட்கள் நடைபெற்றது. இதன், இறுதிப் போட்டியில் தோளூர்ப்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி அணியும், ஈரோடு நந்தா இன்ஜினியரிங் கல்லூரி அணியும் மோதின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி அணி வெற்றிபெற்று, கோப்பையை வென்றது. இம்மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் தொடர்நாயகன், சிறந்த பேட்ஸ்மேன், அதிகம் சிக்சர் அடித்தவர்கள் விருது மற்றும் இறுதி போட்டியில் ஆட்டநாயகன் விருதினை கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி போராசிரியர் குமார் பெற்றார். மேலும் சிறந்த ஆல்ரவுண்டருக்கான விருதை பேராசிரியர் பாஸ்கர் வென்றார்.

சத்தியமங்கலம் பன்னாரி அம்மன் இன்ஜினியரிங் கல்லூரியில், இன்ஜினியரிங் கல்லூரி போராசிரியர்களுக்கான 20-20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் தோளூர்ப்பட்டி கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி அணியும், ஈரோடு கொங்கு இன்ஜினியரிங் கல்லூரி அணியும் மோதின. இதில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோளூர்ப்பட்டி, கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி அணி வெற்றிபெற்றது. இப்போட்டியில் ஆட்டநாயகன் விருதை தொட்டியம், கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி போராசிரியர் பரத் பெற்றார்.

கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிபெற்ற கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியர்களை கல்லூரி சேர்மன் பெரியசாமி, முதல்வர் அசோகன் ஆகியயோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News