கொங்குநாடு பி.எட். கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா

வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பி.எட் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

Update: 2023-12-12 08:00 GMT

வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பி.எட். கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், சப்-கலெக்டர் பிரபாகரன், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டிஎஸ்பி சுபாஷினி ஆகியோர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்கள்.

வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பி.எட் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி கொங்குநாடு பி.எட் கல்லூரியில் பி.எட். முடித்த மாணவ மாணவிகளுக்கான 14-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கொங்குநாடு கல்வி நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் ராஜன் தலைமை வகித்தார். கொங்குநாடு கல்வி நிறுவனத்தின் தலைவர் ராஜா, செயலாளர் சிங்காரவேலு, பொருளாளர் ராஜராஜன், இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சாந்தி பட்டமளிப்பு விழா அறிக்கை வாசித்தார்.

நாமக்கல் மாவட்ட சப்-கலெக்டர் பிரபாகரன், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் டிஎஸ்பி சுபாஷினி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசினார்கள். கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News