நாமக்கல் கிழக்கு மாவட்ட காங் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தல் விருப்பமனு வழங்கல்

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்., கட்சிசார்பில் உள்ளாட்சி தேர்தல் விருப்பமனு வழங்கல்

Update: 2021-12-02 13:00 GMT

நாமக்கல் நகராட்சித் தேர்தலில் போட்டியிட முன்னாள் கவுன்சிலர் ஷேக் நவீத், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக்கிடம் விருப்ப மனு வழங்கினார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் உள்ளாட்சி தேர்தல் விருப்பமனு பெறப்பட்டது. நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், விரைவில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம், விருப்ப மனு பெறும் நிகழ்ச்சி நகர காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் சுகந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் சித்திக் விருப்ப மனுக்களை பெற்றுக்கொண்டார். நாமக்கல் நகராட்சிக்கு போட்டியிட முன்னாள் கவுன்சிலர் ஷேக்நவீத், தமிழ்நாடு காங்கிரஸ் ஓ பி சி பிரிவு மாநில துணைத்தலைவர் டாக்டர் செந்தில் உள்ளிட்ட பலர் விருப்ப மனு கொடுத்தனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வீரப்பன்.

நகர காங்கிரஸ் தலைவர் மோகன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் அன்பு, பொன்முடி, சாந்தி மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News