நாமக்கல்லில் குறைதீர் கூட்டம்: ஆர்வமுடன் மனு அளித்த பொதுமக்கள்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-10-05 02:15 GMT

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ஷ்ரேயா சிங் தலைமையில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள்,  முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இது தொடர்பாக, மொத்தம் 505 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள். மனுக்களைப் பெற்றுக் கொண்ட கலெக்டர், அவற்றை உரிய அலுவலர்களிடம் வழங்கி விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூட்டத்தில் டிஆர்ஓ துர்காமூர்த்தி," கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரமேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News