நாமக்கல் மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள்

நாமக்கல் மாவட்டத்தில் மின்சார வாரியத்தின் சார்பில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் 4 இடங்களில் நடபெறுகிறது.

Update: 2022-10-01 11:45 GMT

தமிழ்நாடு மின்சார வாரியம்.

நாமக்கல் மாவட்டத்தில் மின்சார வாரியத்தின் சார்பில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் 4 இடங்களில் நடபெறுகிறது.

இது குறித்து நாமக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதவாது:

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் மாதந்தோறும், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அக்டோபர் மாத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம், வருகிற 7ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் நாமக்கல் நாமக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

12ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு பரமத்திவேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 19ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு திருச்செங்கோடு செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 26ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. முகாமில் பொதுமக்கள் மின்வாரியம் சம்மந்தப்பட்ட மனுக்களை நேரிடையாக அளித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News