நாமக்கல்லில் 31ம் தேதி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாமக்கல்லில் வரும் 31ம் தேதி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

Update: 2021-12-29 00:45 GMT

இது குறித்து கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல் மாவட்ட, டிசம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 31ம் தேதி காலை, 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

கலெக்டர் ஸ்ரேயாசிங்,  நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து,  விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து, கோரிக்கை மனுக்களைப் பெறுகிறார். கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள்,  கொரோனா கட்டுப்பாடுகளுடன் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News