நாமக்கல் மற்றும் பரமத்தியில் 21ம் தேதி கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
நாமக்கல் மற்றும் பரமத்தியில் வரும் 21ம் தேதி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.;
பைல் படம்
நாமக்கல்,
நாமக்கல் மற்றும் பரமத்தியில் வரும் 21ம் தேதி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
இது குறித்து, கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதம்தோறும் நடத்தப்பட்டு விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகள் கேட்டறியப்படுகிறது. அதையொட்டி வருகிற 21ம் தேதி வெள்ளிக்கிழமை, காலை 11 மணிக்கு, நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. நாமக்கல் கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், நாமக்கல் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் ஆர்டிஓ தலைமையில் நடைபெறும். திருச்செங்கோடு கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் ஆர்டிஓ தலைமையில் நடைபெறும்.
இக்கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு, பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருட்கள் இருப்பு விவரங்கள், வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளையும் தெரிவித்து பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.