பெரியப்பட்டி அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி
பெரியப்பட்டி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல், பெரியப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பிற்கான வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ஷீலா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போது, 10ம் வகுப்பிற்கு பின்னர் என்ன படிக்கலாம் என்பது குறித்தும், தற்போது உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் நடைபெற்ற மீளாய்வுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் ஸ்ரீ தேவி, சுதீப் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் உதவித் தலைமை ஆசிரியை சாந்தி நன்றி கூறினார்.