இலவச வீட்டு மனை வழங்க வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

இலவச வீட்டு மனை வழங்க வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-04-20 02:15 GMT

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்டத் தலைவர் துரைசாமி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் கணபதி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும். மின் வாரியத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க வேண்டும். டீசல் இன்ஜின் வைத்துள்ள விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். ஊரக வேலை திட்டத்தில் புதிதாக கொண்டு வந்த சட்ட பிரிவு 43ஐ ரத்து செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. சங்க மாவட்டச் செயலாளர் சபாபதி, உதவித் தலைவர் செல்வராஜ், சிஐடியு மாவட்ட செயலாளர் வேலுசாமி, மாவட்ட துணைத்தலைவர் குப்பண்னன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News