எலச்சிப்பாளையத்தில் டிச.23ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

எலச்சிப்பாளையத்தில் வருகிற 23ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

Update: 2021-12-21 02:30 GMT

எலச்சிப்பாளையத்தில் வருகிற 23ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம், தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல் யோஜனா திட்டத்தின் கீழ், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வருகிற 23ம் தேதி, எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார இயக்க மேலாண்மை அமைப்பின் மூலம் நடைபெற உள்ளது.

வேலைவாய்ப்பற்ற இருபாலருக்கும் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எலச்சிப்பாளையம் வட்டாரத்தை சேர்ந்த படித்து வேலைவாய்ப்பற்றவர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்களுக்கு விருப்பமான நிறுவனங்களை தேர்வு செய்து வேலை வாய்ப்பு பெறலாம்.

வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய விரும்பும் நிறுவனங்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட இயக்க மேலாண்மை திட்ட அலுவலகத்தை 22ம் தேதி மாலை 5 மணிக்குள் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News