நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.40 லட்சம் மதிப்பில் பருத்தி ஏலம்

நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பருத்தி ஏலம் நடைபெற்றது.

Update: 2022-04-27 07:15 GMT

பைல் படம்.

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க (என்சிஎம்எஸ்) வளாகத்தில் வாரம் தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு, நாமக்கல், வேலகவுண்டம்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாய்க்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை, வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமப்பட்டி, ஆகிய பல்வேறு பகுதிகளில் இருந்து, விவசாயிகள் 1,150 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர். திருச்செங்கோடு, கொங்கானபுரம், ஈரோடு, திருப்பூர், கோவை, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த, வியாபாரிகள் நேரடி ஏலத்தில் கலந்துகொண்டு, பருத்தியை கொள்முதல் செய்தனர்.

ஆர்.சி.எச் ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.8,999 முதல் ரூ.12,675 வரையிலும், சுரபி ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.8 ,050 முதல் ரூ.13,099 வரையிலும், கொட்டு ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,495 முதல் ரூ.9,850 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் பருத்தி ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News