கொரோனாவில் இருந்து குணமடைந்து பணிக்கு திரும்பினார் நாமக்கல் கலெக்டர்
கெரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நாமக்கல் கலெக்டர், சிகிச்சை குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பினார்.
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், கடந்த 16ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து, அலுவலகத்திற்கு வராமல், வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். நாமக்கல் அரசு ஆஸ்பத்திர மருத்துவக் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு படிப்படியாக நோயின் தாக்கம் குறைந்து வந்தது.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல், வீட்டில் உள்ள முகாம் அலுவலகத்தில் பணியைத் தொடங்கினார். அவர் முழுமையாக குணமடைந்ததால், தற்போது கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து பணிகளை மேற்கொண்டார். மேலும், சேலத்தில் நடைபெற்ற 8 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்ற கூட்டத்திலும், நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் கலந்து கொண்டார்.