மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் மீது அதிகாரிகள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.

Update: 2022-08-22 12:45 GMT

நாமக்கல்லில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில், கலெக்டர் ஸ்ரேயாசிங் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, குறைகளை கேட்டறிந்தார்.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ஸ்ரேயாசிங் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று, குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 323 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.

மனுக்களைப் பெற்று கொண்ட கலெக்டர், அவற்றை உரிய அலுவலர்களிடம் வழங்கி, மனுக்களை விரைவாக பரிசீலனை செய்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பல்வேறு துறை அரசு அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News