முதல்வர் ஸ்டாலின் நாமக்கல் வருகை: 2 நாட்கள் டிரோன்கள் பறக்கத்தடை

முதல்வர் ஸ்டாலின் நாமக்கல் வருகையையொட்டி 2 நாட்கள் டிரோன்கள் பறக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-01 14:21 GMT

நாமக்கல் நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளதால், இன்று முதல் 2 நாட்களுக்கு நாமக்கல் பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் நகருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின்  2ம் தேதி வருகை தருகிறார்.  நாளையும் 3ம் தேதியும் அவர் நாமக்கல் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இதையொட்டி நாமக்கல் மாவட்ட எல்லையான பரமத்திவேலூர், நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட தாலுக்கா பகுதிகளில், 2 நாட்களும் டிரோன்கள் மூலம் வீடியோ, போட்டோ பதிவு செய்யவும், இதர காரணங்களுக்காக டிரோன்கள் பறக்கவும் தடை விதிக்கப்படுகிறது. இதை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News