நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம்

நாமக்கல் தொகுதி கொமதேக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் 31ந்தேதி பிரச்சாரம் செய்கிறார்.

Update: 2024-03-29 11:49 GMT

நாமக்கல் லோக்சபா தொகுதியில், திமுக கூட்டணியில் போட்டியிடும், கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து 31ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

இது குறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமார் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் லோக்சபா தொகுதியில், திமுக கூட்டணியில் போட்டியிடும், கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து, திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் வரும் 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். 31ம் தேதி மாலை 5 மணிக்கு ஈரோடு மாவட்டம் சின்னியாம்பாளையத்தில், நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து முதலமைச்சர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார். பின்னர், திருச்செங்கோடு மலை சுற்றி வாலரைகேட் மார்க்கமாக கொக்கராயன்பேட்டை ரயில்வே கேட் ஆற்றுப்பாலம் அடுத்துள்ள, இரண்டாவது நான்கு ரோட்டின் இடதுபுறம் சோலார் செல்லும் வழியில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News