நாமக்கல்லில் காந்தி வேடத்தில் வேட்பு மனு

நாமக்கல்லில் காந்தி வேடம் அணிந்து ஒருவர் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Update: 2021-03-12 10:57 GMT

நாமக்கல்லில் காந்தி வேடம் அணிந்து முதல் வேட்பு மனுவை நாமக்கல் சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்த நபர்.

தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் தொடங்கியது. இந்நிலையில் நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்காக அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர் ரமேஷ் நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாமக்கல் சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் ரமேஷ் காந்தியடிகள் போல் வேடம் அணிந்து மனு தாக்கல் செய்தார் . முன்னதாக கடந்த 1934 ஆம் ஆண்டு அன்று காந்தியடிகள் நாமக்கலுக்கு வருகை புரிந்த போது நாமக்கல் மலைக்கோட்டையில் உள்ள திட்டு ஒன்றில் அமர்ந்து பிரச்சார செய்த இடத்தில் வேட்பாளர் ரமேஷ், அந்த இடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தியதோடு சுமார் 2 கி.மி தூரம் தனது சைக்கிளில் வலம் வந்து நாமக்கல் சட்டமன்றத் தொகுதியின் முதல்வேட்பாளராக நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் கோட்டைக்குமாரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 

இவர் இதுவரை 6 முறை சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News