நாமக்கல்: கொங்குநாடு கல்வி நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

கொங்குநாடு கல்வி நிறுவனத்தில்மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Update: 2021-12-25 02:15 GMT

தோளூர்ப்பட்டி கொங்குநாடு கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை கல்லூரி சேர்மன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

கொங்குநாடு கல்வி நிறுவனத்தில்மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

நாமக்கல் - திருச்சி மாவட்ட எல்லையில் தோளூர்ப்பட்டியில், கொங்குநாடு இன்ஜினியரிங் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, பி.எட் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்த வளாகத்தில் படிக்கும் மாணவ மாணவிகளுக்காக 4வது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் சேர்மன் பெரியசாமி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். கல்லூரிகளின் முதல்வர்கள் முன்னிலை வகித்தனர்.

இந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் காட்டுப்புத்தூர், மேய்க்கல்நாய்க்கன்பட்டி ஆரம்பசுகாதார நிலைய டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டனர். மொத்தம் 214 மாணவ மாணவிகளுக்கு முதல் மற்றும் இரண்டாம் தவனை தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமிற்கான ஏற்படுகளை கல்லூரி பேராசிரியர்கள் கார்த்திகேயன், இளங்கோ, கிருஷ்ணமூர்த்தி மற்றும் என்எஸ்எஸ் திட்ட மாணவர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News