நாமக்கல்: கல்பனா சாவ்லா விருது பெற நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களிடம் இருந்து, கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் நாளை மாலைக்கும் வரவேற்கப்படுகின்றன.

Update: 2021-06-23 07:47 GMT

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாமக்கல் மாவட்ட பிரிவு சார்பில், 2021ம் ஆண்டிற்கான துணிச்சலுடன், சமுதாய தொண்டு செய்து சாதனை புரிந்த பெண்மணி ஒருவருக்கு சுதந்திர தினத்தன்று கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது.

இந்த விருது பெற தமிழ்நாட்டைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். அதற்கான சான்று இணைக்க வேண்டும். இதன்படி வீர, தீர செயல்கள் புரிந்த தகுதிவாய்ந்த பெண்மணிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இவ்விண்ணப்பங்கள் நாளை 24ம் தேதி மாலை 5 மணிக்குள், நாமக்கல் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News