ஸ்ரீ ரங்கநாதர் கோயில், ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2,04,471

நாமக்கல் ஸ்ரீ ரங்கநாதர் கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கோயில் உண்டியல் காணிக்கையாக, ரூ.2,04,471 பெறப்பட்டுள்ளது.

Update: 2022-01-20 10:15 GMT

கோப்பு படம் 

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, பக்தர்கள் காணிக்கை செலுத்துவற்காக சிறப்பு உண்டியல்கள் அமைக்கப்பட்டன. கோயில் செயல் அலுவலர் ரமேஷ் முன்னிலையில், அந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில் பக்தர்களின் காணிக்கைகள் ரூ.1 லட்சத்து 926 ரொக்கம் கணக்கீடு செய்யப்பட்டது.

நாமக்கல் ஸ்ரீ அரங்கநாதர் கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக, சிறப்பு உண்டியல்கள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன. அதில் பக்தர்களின் காணிக்கையாக ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 545 ரொக்கம் பெறப்பட்டது. இரண்டு கோயில்களின் உண்டியல்களிலும் சேர்த்து,  மொத்தம் ரூ.2 லட்சத்து 4 ஆயிரத்து 471 ரொக்கம் பெறப்பட்டது.

Tags:    

Similar News