ரம்ஜான் தொழுகைக்கு வந்த முஸ்லீம்களை கட்டித்தழுவி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ரம்ஜான் தொழுகைக்கு வந்த முஸ்லீம்களை கட்டித்தழுவி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

Update: 2024-04-11 04:30 GMT

பட விளக்கம் : நாமக்கல்லில் ரம்ஜான் தொழுகை முடித்து திரும்பிய முஸ்லீம்களை, அதிமுக வேட்பாளர் தமிழ்மணி சந்தித்து, இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டார். அருகில் ப.வேலூர் எம்எல்ஏ சேகர்.

நாமக்கல்லில் ரம்ஜான் தொழுகை முடித்து திரும்பிய முஸ்லீம்களை, அதிமுக வேட்பாளர் தமிழ்மணி சந்தித்து, இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டார். அருகில் ப.வேலூர் எம்எல்ஏ சேகர்.

ரம்ஜான் தொழுகைக்கு வந்த முஸ்லீம்களைக் கட்டித்தழுவி அதிமுக வேட்பாளர் ஓட்டு வேட்டை

நாமக்கல், 

நாமக்கல்லில் நடைபெற்ற ரம்ஜான் தொழுகைக்கு வந்த முஸ்லீம்களை, அதிமுக வேட்பாளர் தமிழ்மணி கட்டித்தழுவி, ரம்ஜான் வாழ்த்துக்கூறி ஓட்டு சேகரித்தார்.

நாமக்கல் பார்லிமென்ட் தொகுதி அதிமுக வேட்பாளராக தமிழ்மணி போட்டியிடுகிறார். இன்று காலை 8 மணிக்கு, நாமக்கல், சேலம் ரோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்புத்தொழுகையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கலந்துகொண்டனர். தொழுகையை முடித்துவிட்டு, மைதானத்திற்கு வெளியில் வந்த முஸ்லீம்களை அதிமுக வேட்பாளர் தமிழ்மணி சந்தித்து, ஏற்கனவே அதிமுக ஆட்சியில் நாமக்கல் பகுதிக்கு செய்யப்பட்ட நலத்திட்டங்களை எடுத்துக்கூறி, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டார். பின்னர் முத்தவல்லி தவுலத்கான் உள்ளிட்ட மஸ்ஜித் நிர்வாகிகளை அவர் சந்தித்து, கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை கூறி, தனக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

பரமத்திவேலூர் எம்எல்ஏ சேகர், பொதுக்குழு உறுப்பினர் மயில்சுந்தரம், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் காந்திமுருகேசன், கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜா என்கிற செல்வகுமார், அதிமுக பிரமுகர்கள் கமால்பாஷா, சாதிக்பாஷா உள்ளிட்ட திரளானவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News