நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 56,961 பேருக்கு கொரோனா தடுப்பூசி

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 56,961 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Update: 2022-07-11 06:00 GMT

நாமக்கல் மாவட்டத்தில், ஏற்கனவே நடைபெற்ற 30 மெகா தடுப்பூசி முகாம்களில், 8 லட்சத்து 36 ஆயிரத்து 522 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றுள்ளனர். இந்த நிலையில் நேற்று 31-வது கட்டமாக அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்ட 2,766 சிறப்புமுகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இப்பணியில் 210 டாக்டர்கள். 430 நர்சுகள் மற்றும் ஆசிரியர்கள் உள்பட சுமார் 5 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டனர். மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் நடந்த சிறப்பு முகாமில் 56,961 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டாக பொது சுகாõதரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News