நாமக்கல் துணை மின் நிலைய பகுதியில் வரும் 29ம் தேதி மின்நிறுத்தம்

நாமக்கல் துணை மின் நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 29ம் தேதி மின்நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

Update: 2022-01-27 06:45 GMT

பைல் படம்.

நாமக்கல் பகுதியில் வருகிற 29ம் தேதி மின்சாரத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வருகிற 29ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் தடை செய்யப்படும்.

இதனால் நாமக்கல் டவுன், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்ஜிஓ காலனி, வீசானம், சின்ன முதலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News