நாமக்கல் பகுதியில் 23ம் தேதி, எருமப்பட்டியில் 24ல் மின்சாரம் நிறுத்தம்

நாமக்கல், எருமப்பட்டி துணைமின் நிலைய பகுதிகளில் மின் நிறுத்தம் குறித்த அறிவிப்பை மின்வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2021-11-21 11:00 GMT

பைல் படம்.

நாமக்கல் பகுதியில் 23ம் தேதி மின்சாரத்தடை ஏற்படும். எருமப்பட்டி பகுதியில் 24ம் தேதி மின்சாரம் தடை செய்யப்படும்.

இது குறித்து நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளதால், வரும் 23ம் தேதி, செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மின்சார விநியோகம் தடை செய்யப்படும். இதனால் நாமக்கல் டவுன், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபும், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்ஜிஓ காலனி, வீசானம், சின்ன முதலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வருகிற 24ம் தேதி, புதன்கிழமை, காலை 9 மணி முதல் மின்சார விநியோகம் நிறுத்தப்படும். இதனால் எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையான்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டாஞ்செட்டி, வரதராஜபுரம், சிங்களங்கோம்பை, பொன்னேரி, என்.புதுக்கோட்டை, கோனங்கிப்பட்டி, காவக்காரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரத்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News